தமிழகத்தில் 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மூன்று வருடங்கள் பொதுத் தேர்வு நடத்துவதால் மாணவர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதனால் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில்11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து குறித்து தொடர்ந்து ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இது தொடர்பாக ஆலோசனை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதனை முடித்து பேட்டி அளித்த அமைச்சர், பிளஸ் 1 பொதுத் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல நடைபெறும். இருந்தாலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்போம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்