தமிழகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்குவது குறித்து அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. சர்வதேச போதை ஒழிப்பு தினம் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு இந்த பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் விருது பெறுகிறார். தென் மண்டல காவல் தலைவர் அஸ்ரா கார்குக்கு சிறப்பு பதக்கம் என தமிழக அரசு தற்போது காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.