தமிழகத்தில் கரவை மாடுகள் மற்றும் பால் முகவர்களுக்கு ஆவின் நிறுவனம் மூலமாக காப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கரவை மாடுகள் இறந்து போனால் பால் முகவர்கள் புதிய மாடு வாங்க காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு சார்பில் ஆடு மாடு மற்றும் கோழிகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆவின் நிறுவனம் புதிய காப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பால் முகவர்களிடம் காப்பீடு கட்டணமாக 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை வசூல் செய்யப்படும் என்றும் 25 சதவீதம் வரை காப்பீடு வழங்கப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 50% வரை காப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக பால் முகவர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பால் முகவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.