தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பட்டியலை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை பட்டாதாரி ஆசிரியர்கள் விவரங்களை கணக்கெடுக்கப்பட உள்ளன .இதை அடுத்து தங்கள் எல்லைக்குட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள நேரடி நியமன காலி பணியிட விவரங்களை தயார் செய்ய வேண்டும்.

அதன்படி கடந்த ஜூன் 1 முதல் 2024 மே 31 வரை ஓய்வு பெற இருக்கும் முதல்நிலை ஆசிரியர்கள், உடற்கல்வி  இயக்குனர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் விவரங்களை பணியிடம் வாரியாக  தனித்தனியாக தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதில் எந்தவித தவறும்  நடைபெறாதவாறு உரிய முறையில் அனைத்து பணிகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.