தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்காக பிரத்யகா புதிய இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய இணையதளத்தில் ஆயிரம் ரூபாய் கிடைக்காதவர்கள் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு kmut.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் சென்ற பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள போன் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை உள்ளீடு செய்தால் பணம் கிடைக்காததற்கான விவரம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.