தமிழகத்தில் பாஜவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், நாங்கள் தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை ஓய மாட்டோம். தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். அதன்பின் மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர்  வேட்பாளருக்கு தான் எங்களது ஆதரவு என பேசியுள்ளார்.