தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிக்காத விதமாக மூன்று அரையாண்டு தேர்வு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு ஏற்ப ஒரு அட்டவணைப்படி அரையாண்டு தேர்வு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது