சுதந்திரப் போராட்டத் தியாகியும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார். 102 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.