தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையவளையிலும் விடுதியில் பணியாற்றும் காப்பாளர்களுக்கான கலந்தாய்வு நேரடி முறையிலும் நடைபெற உள்ளது.

அதன்படி முதல் கட்டமாக முதுகலை ஆசிரியர் தலைமை ஆசிரியர்கள், கணினி மற்றும் உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி, பட்டதாரி இடைநிலை மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் நான்காம் தேதி பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். இந்த கலந்தாய்வில் எந்த தவறுகளும் நிகழாதவாறு ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.