தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் பொங்கல் விடுமுறை ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை செய்து விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.