திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981ன் படி அனைத்து இந்திய தயாரிப்பு மதுபான கடைகள், அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகியவை இயங்கக் கூடாது. இதை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.