தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது கோடை விடுமுறையானது முடியவில்ல நிலையில் பள்ளி திறப்பு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1-5 வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும், 6-12 வரை ஜூன் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடுமுறையை ஒருவாரம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அன்பில் மகேஷ் இன்று வெளியிடவுள்ளார்.