மிக்ஜாம் புயல் எதிரொளியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.