தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளன. நாளை மதியம் தேர்வு முடிந்த உடன் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளி எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும்.