அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை நாளை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் டெல்லியை மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தைகள் நாளை செயல்படாது. 12 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.