நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஜூலை 8ஆம் தேதி சனிக்கிழமை வேளை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 6 கி.மீ. தொலைவிலும், திருவாரூர் நகரில் இருந்து கிழக்கில் 20 கி.மீ. தொலைவிலும், கீழ்வேளூர் ஊரில் இருந்து கிழக்கில் 6 கி.மீ. தொலைவிலும் சிக்கல் சிங்காரவேலர் முருகன் கோவில் உள்ளது.