மிக்ஜாம் புயலால் சென்னையில் இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.