சென்னையில் இன்று காலை முதல் ஆவின் பால் விநியோகம் சீரடையும் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதன் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சாலைகளில் நீர் தேங்கியதால் பால் விநியோகம் தடைபட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் எந்தவித சிரமமும் இல்லாமல் ஆவின் பால் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.