தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இல்லை என்ற பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியை சேர்ந்த 55 வயதுமிக்க ரவிக்குமார் என்பவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. பருவ கால மாற்றத்தின் போது இந்த வகை காய்ச்சல்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் தலங்களை மட்டுமல்லாமல் அனைத்து இடங்களையும் கிருமி நாசினிகள் மூலமாக சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.