தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்க சிறைத்துறை முடிவெடுத்து உள்ளது. டிரோன் கேமரா பயன்பாட்டிற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிறைத்துறை கடிதம் எழுதியுள்ளது. அனுமதி கிடைத்தால், முதல்கட்டமாக புழல் சிறையில் சோதனை முயற்சி நடைபெறலாம் என கூறப்படுகிறது. சிறை வளாகங்களில் உள்ள அனைத்து பகுதிகளையும் டிரோன் வழியே 24*7 கண்காணிக்க முடியுமாம்.