தமிழகத்தில் பொதுவாக முக்கியமான பண்டிகை நாட்களில் மக்கள் வெளியூர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜூலை 17ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதி களின் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதாவது வருகின்ற ஜூலை 15ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் ஆடி அமாவாசை என்பதால் அன்றைய தினம் முக்கிய கோவில்களான பல கோவில்களுக்கும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

இதனை முன்னிட்டு பொது மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் முக்கிய கோவில் தலங்களில் பக்தர்களுக்கு உதவவும்வழி காட்டவும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.