தமிழகத்தில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதான்படி, பிஇ, பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர ஜூலை 22 முதல் செப்டம்பர் 11 வரை கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று மாலை சென்னையில் பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டார்.

அதன்பின்னர் பேசிய அவர், முதலில் சிறப்பு பிரிவு 7.5% உள்ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். பொதுப்பிரிவு கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.