தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை மாற்றப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி பொது விடுமுறை என உணவுப்பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளுக்கான விநாயகர் சதுர்த்தி விடுமுறை வரும் 17ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல், முன்பு விநாயகர் சதுர்த்தி அரசு பொது விடுமுறை 17ஆம் தேதி என அறிவித்து, பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 18ஆம் தேதிக்கு மாற்றி கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.