தமிழகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் கூறியபடி சிறை கைதிகளுக்கு புதிய உணவு முறையை அமைச்சரகுபதி தொடங்கி வைத்துள்ளார். ஆண்டுக்கு 26 கோடி கூடுதல் செலவினத்தில் உணவு முறை மற்றும் உணவின் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காலையில் பொங்கல், அவித்த முட்டை, மதியம் சிக்கன் கிரேவி, மாலை சூடான சுண்டல், டீ, இரவு சப்பாத்தி சென்னா மசாலா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒருவருக்கு நாள் ஒன்று காண செலவு 96 ரூபாயிலிருந்து 135 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.