தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் மூலம் தினந்தோறும் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

பல மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் மக்களுக்கு சிரமம் கூடாது என்பதற்காக தமிழகத்தில் கட்டணம் உயர்வு ஏதும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அகலவிலைப்படி உயர்வு குறித்த ஓய்வூதியத்தாளர்களின் கோரிக்கைகள் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.