நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலனியை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற 22 வயது இளைஞர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை முடித்துவிட்டு இறுதித் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இவர் ஆன்லைன் செயலி மூலமாக தன்னுடைய பண தேவைக்காக 15,000 கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. இதனை பெற்றோருக்கு தெரியாமல் அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.

கடனை திருப்பி செலுத்துவதற்கான கடைசி தேதியும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடன் கொடுத்த நிறுவனம் மாணவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு கடன் வாங்கிய விவரத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் லோகேஸ்வரன் மிகவும் மன முடிந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.