ஆடி கிருத்திகையை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி கிருத்திகை ஆடிப்பெருமானுக்கு உகந்த விழாவாக பார்க்கப்படுகிறது. முருகன் கோவில் அமைந்திருக்கும் மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.