தமிழகத்தில் 4 ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் மேலாளர் தமிழ்மணி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் 4g சேவை தொடங்கப்படும். இதன் காரணமாக ஏற்கனவே தமிழகத்தின் செயல்பாட்டில் இருக்கும் 6 ஆயிரம் பிஎஸ்என்எல் டவர்கள் 3g யில் இருந்து 4ஜிக்கு மாற்றப்படுகிறது என்றார். தனியார் நிறுவனங்கள் 5g சேவை வழங்கும் நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி வழங்குவது ஏன் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.