தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இணையதளம் மூலமாக பிப்ரவரி 28ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் கடந்த முறை போலவே குரூப் 4 பதவிக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.