பிரதமர் கூறியபடி மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருக்கும் எனவும் கணித்துள்ளார். அதிமுக கூட்டணி இல்லாமல் மூன்றாவது அணியை உருவாக்கி வரும் பாஜக தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.