சென்னையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் ஷர்மி என்ற பெண்ணை ஜாதி மறுப்பு திருமணம் செய்த பிரவீன் என்ற இளைஞர் ஆவண படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் கூட்டாளிகள் மூன்று பேர் சேர்ந்து பிரவீனை சரமாரியாக அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.