தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வெளியூர்களுக்கான பேருந்து பயணங்களுக்கு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் புதிதாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

இந்த நிலையில் வார இறுதி நாளை முன்னிட்டு 250 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதில் கூடுதலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 16ம் தேதி 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.