தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் 45 நாட்கள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக விசைப்படகுகளும் ஆழ் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் இன்று முதல் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் தகுந்த பாதுகாப்புடன் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதே சமயம் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை எனவும் மே 30ஆம் தேதிக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.