தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஆடவர் கலை கல்லூரி வளாகத்தில் நவம்பர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதாவது இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் தனியார் மருத்துவமனையில், மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருந்து சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ் மற்றும் மற்ற ஆவணங்களுடன் மார்பளவு புகைப்படத்துடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.