சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஆசிரியர்களின் போராட்டத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும். எனவே மாணவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.