தமிழகத்தில் நடப்பு நிதியாண்டு காண பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் தாக்கல் செய்தார். இதில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான அகல விலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தற்போது 46 சதவீதம் அகலவிலைப்படி வழங்கப்படும் நிலையில் ஜனவரி மாதத்தில் நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் கிட்டத்தட்ட 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். எனவே இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.