விஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், போகணும் என்று தோன்றியிருக்கு போயிருக்காங்க. இனிமேல் காங்கிரசே இருக்காது. இதனால் காங்கிரசில் இருந்து எந்த பயனும் இல்லை என்று நினைத்து பாஜகவிற்கு சென்றிருக்கலாம்.

காங்கிரஸ் கட்சியாவது மதித்து 3 முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ஆனால் பாஜக மாதிரி கட்சியெல்லாம் சேரும் போது செய்தி.. அவ்வளவு தான் அதுக்கு பிறகு இறந்தால் கூட செய்தி வருமா என்று தெரியாது என்று தெரிவித்துள்ளார்