தமிழகத்தில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம்-நீக்கம் செய்து கொள்ளலாம்.

வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, லைசென்ஸ், ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கொண்டு செல்லவும். முகாம் இன்று நடைபெறுவது போல் 5, 18, 19 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.