தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாகவே ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் செப்.25ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.