தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. என் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முந்தைய வார இறுதி நாட்கள் ஆன ஜூன் நான்காம் தேதி அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர்களில் இருந்து இருப்பிடங்களுக்கு திரும்புவார்கள்.

இதன் காரணமாக பேருந்துகளில் வழக்கத்தை விட கூடுதலாக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் தமிழக போக்குவரத்து கழகம் சென்னையிலிருந்து மற்ற தமிழக மாவட்டங்களுக்கும் மற்ற தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மொத்தம் 250 பேருந்துகளும், திருச்சியில் இருந்து மற்ற ஊர்களுக்கு 150 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் ஜூன் நான்கு மற்றும் ஐந்து ஆகிய தேதிகளில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.