தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. என் நிலையில் ஜூலை 21ஆம் தேதி யான இன்று தமிழகத்தில் சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களின் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் வேலை இல்லாத இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கல்வி தகுதிக்கேற்ற சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.