தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (25.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை: ஏப்ரல் 25ஆம் தேதி காலை 9:00 மணி – மதியம் 2:00 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக, மதுரை அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, மாநகராட்சி அலுவலகம், எஸ்.பி.ஐ., குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலா நகர், மருத்துவக் கல்லுாரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லுாரி, அரசு மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக் கண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, இ2 இ2 ரோடு, ஓ.சி.பி.எம்.உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தஞ்சை: மருத்துவக்கல்லுரி சாலையில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 25ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியாகம் பெறும் மருத்துவக்கல்லுரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல்காலனி, திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மனோஜிப்பட்டி, ரெட்டிபாளையம்ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

கோவை: விளாங்குறிச்சி, காளப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் ஏப்ரல் 25 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், நேரு நகர், சிட்ரா, கைகோளம்பாளளையம், வலியம்பாளையம், பாலாஜி நகர், கே.ஆர்.பாளையம், ஜீவா நகர், விளாங்குறிச்சி, தண்ணீா்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், சார்ப் நகர், மகேஷ்வரி நகர், குமுதம் நகர், செங்காளியப்பன் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.