கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் தேவாலய விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 16ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.