ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஜனவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் என சுமார் 3000 பேர் பணியாற்றி வருகிறார்கள். ஏற்கனவே இவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் நிதி நெருக்கடி காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை அரசு குறைக்க உயர்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஜனவரி 8 முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.