தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டத் தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட வேளாண் மண்டல திருத்த சட்டத்தை அமைச்சர் MRK பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். மேலும், ஆட்டோ கட்டணம் முறைப்படுத்துதல் தொடர்பான இயக்க ஊர்திகள் சட்ட மசோதாவை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார். ஆட்டோ ஓட்டுனர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆட்டோ கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என தெரிகிறது.