டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் மதுபான பார்கள் அனைத்திற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அரசு ஆணைப்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபானக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.08.2023 (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார். அதே போல் அனைத்து மாவட்டங்களுக்குமான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும்.