தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஆகஸ்ட் 11 அதாவது நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதனைப் போலவே மறு மார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயிலில் இரண்டும் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், ஒன்பது படுக்கை வசதி பெட்டிகள், ஐந்து பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறையில் செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாச்சலம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.