இந்தியாவில் அரசு தரப்பு ஊழியர்களுக்கு அலுவலக வருகை பதிவு முறை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பான்மையான மத்திய மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மின்வாரியத்தின் களப்பணி மற்றும் கணக்கீட்டு பதவிகளில் உள்ள ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வராமல் பதிவு செய்வதாகவும் சரியான அலுவலக நேரங்களை கடைபிடிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையில் வருகையை பதிவு செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது பணியின் தன்மை மிகவும் வித்தியாசமாக இருப்பதால் பயோமெட்ரிக் நேரடியாக பொருந்தாது என்று மின்வாரிய உயர் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.