தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ரேஷன் கடை உள்ளே மற்றும் வெளியே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் தரம் குறைந்த அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் குடும்ப அட்டைதாரர்களிடம் மரியாதையாக நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.