தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையின் போது சாலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடைபெற்ற வருகின்றது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தற்போது முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் சாலை பணிகளில் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தலைமைச் செயலாளர் சாலை பணி பற்றி ஒவ்வொரு வாரமும் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் மழை  மற்றும் வெயில் என அனைத்தையும் சாலைகள் தாக்குபிடிக்க வேண்டும் என்பதால் அதனை விரைவாகவும் தரமாகவும் அமைக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.